Skip to content
Home » முக்கோண காதல்……..மயிலாடுதுறை கல்லூரி மாணவன், மாணவி தீயில் கருகி…. உயிருக்கு போராட்டம்

முக்கோண காதல்……..மயிலாடுதுறை கல்லூரி மாணவன், மாணவி தீயில் கருகி…. உயிருக்கு போராட்டம்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்த  ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(வயது 24). இவர், பூம்புகாரில் உள்ள கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த  நாகப்பன் மகள் சிந்துஜா(20). இவர், மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக மாணவி சிந்துஜா கருதினார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.நேற்று மாலை  காதலர்கள் இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு   சிறிது நேரம்  பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர் வீடு திரும்புவதற்காக  பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் பாட்டிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினர்.  அதன்பிறகு பைக் புறப்பட்டது.  அப்போது இன்னொரு காதல் விவகாரத்தால் மீண்டும் வாக்குவாதம்  ஏற்பட்டது. மயிலாடுதுறை  நகருக்குள் நுழையும் பாலக்கரை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்த சொன்ன சிந்துஜா, தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி  தீவைத்துக்கொண்டார்.

அந்த தீ  ஆகாஷ் மீதும் பற்றியதும்.  அலறித்துடித்தபடி அவர் அப்போதும் பைக்கில் 50மீ் தூரம் உள்ள வாய்க்காலுக்கு போனால். இருவரும் எரிந்து கொண்டே பைக்கில் சென்றனர். வாய்க்காலில் தண்ணீர் இருக்கும் அதனுள் பைக்கை விட்டு விடலாம் என  ஆகாஷ் கருதினார். ஆனால் வாய்க்காலில் தண்ணீா் இல்லை. இதனால் இருவரும் அங்கேயே  விழுந்தனர்.

இந்த கோர சம்பவத்தை பார்த்த பொதுமக்கள்  ஓடி வந்து அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்தில் பைக்கும் தீப்பிடித்து எரிந்தது.

பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காதல்ஜோடி  அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்அளிக்கப்பட்டு வருகிறது.  இருவர் நி்லைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி திடீரென தீக்குளித்ததும், அந்த தீ காதலன் மீது பரவி அவரும்   தீக்காயம் அடைந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!