Skip to content
Home » மதுரையில் பைக் மீது கார் மோதல்….. 6 பேர் பலி

மதுரையில் பைக் மீது கார் மோதல்….. 6 பேர் பலி

  • by Senthil

மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி,  மற்றும் குழந்தையுடன் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு  சென்று சாமி கும்பிட்டு விட்டு  இன்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.  சிவரக்கோட்டை என்ற இடத்தில்  வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டி என்பவர் சாலையை கடக்க முயன்ற போது கார் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.  மோதிய வேகத்தில் கார் இரண்டு முறை உருண்டு விழுந்தது.

இதில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே  பலியானார்கள்.  சிலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் ஒருவர்  இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆனது.  இந்த விபத்து மதுரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!