Skip to content
Home » மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

  • by Senthil

மதுரை தெற்கு மாசி வீதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்தி நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் விற்பனை நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென நகைக்கடையின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனை தொடர்ந்து உரிமையாளரின் மருமகனான மோதிலால் தீயை அணைப்பதற்காக கடையின் முதல் தளத்திற்கு சென்ற நிலையில், அங்கு அவர் தீயில் மாட்டிக்கொண்டார்.  தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீயில் மாட்டிக்கொண்ட மோதிலாலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!