Skip to content
Home » திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடன் வாழலாம்…. கோர்ட் அனுமதி…கணவன் ஷாக்..

திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடன் வாழலாம்…. கோர்ட் அனுமதி…கணவன் ஷாக்..

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவருக்கு பிப்ரவரி 2012 ல் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன்(வயது10 )மற்றும் ஒரு மகள் (வயது 6) உள்ளனர். ஜிம் பயிற்சியாளரின் மனைவி பரிதாபாத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக ஊடகங்களில் பழகியுள்ளார். இவர்களுக்கு இடையிலான பழக்கம் மெல்ல மெல்ல காதலாக மாறியது. பின்னர் அந்த பெண் அவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு ஆகஸ்ட் 7, 2022 அன்று சமூக ஊடகங்களில் பழக்கமான நபருடன் ஓடி விட்டார். பின்னர் அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதை தொடர்ந்து ஜிம் பயிற்சியாளர் மாநில ஐகோர்ட்டை நாடினார். தனது மனைவி வேறொருவருடன் வாழ்ந்து வருவதாகவும், தனது மனைவி சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

நீதிபதிகள் மனைவியை மே 4 ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீஸ் சூப்பிரெண்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த பெண் பரிதாபாத்தைச் சேர்ந்த ஒருவருடன் தான் முழு விருப்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும். தனது கணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால், இனி அவருடன் வாழ விரும்பவில்லை என கூறினார். இதை தொடர்ந்து நீதிபதிகள் பங்கஜ் புரோகித் மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அந்த பெண்ணின் விருப்பத்தின் பேரிலேயே அந்த பெண் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அந்தப் பெண் எப்படி இருந்தாரோ அப்படியே வாழ நீதிமன்றம் அனுமதித்தது. அந்த தீர்ப்பை கேட்ட கணவர் அதிர்ச்சி அடைந்து வேதனை தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அவரது வழக்கறிஞர் அருண்குமார் அதிருப்தி தெரிவித்தார், இதுபோன்ற தீர்ப்பு திருமண முறைக்கு ஆபத்தாக மாறும். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!