Skip to content
Home » திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனித்தேர்.. பக்தர்கள் பரவசம்..

திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனித்தேர்.. பக்தர்கள் பரவசம்..

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது .  பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் கடந்த மாதம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தினசரி அம்மனுக்கு பூச்செறிதல், புனித நீர் எடுத்து வருதல், அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பனைகளில் பொங்கலிட்டு வழிபாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. சுமார் 32 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஓலை பிடாரியம்மன் 30 அடி உயரமுள்ள மற்றொரு திருத்தேரில் மதுரைக்காளியம்மன் எழுந்தருளினர். அப்போது விவசாயம் செழிக்க வேண்டியும், உலகமக்கள் நன்மைக்காகவும், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மிகப்பெரிய இரண்டு திருத்தேர்களையும் பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்தனர். பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு தேங்காய் பழம் படைத்து சுவாமியை வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!