Skip to content
Home » மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கு காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சஞ்சீவ் குமார் ஆகியோர் பஸ்சினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் நெய்வேலியில் போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கல் வீசி தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. மேலும் விசாரணையில் பஸ்சின் கண்ணாடியை உடைத்த பாஜக தெற்கு ஒன்றிய செயலாளர் அரவிந்த் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!