மயிலாடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு:-
மயிலாடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனிதம் வாய்ந்த காவிரி துலாக்கட்டத்தில் காவியின் வடக்கு கரையில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
பக்தர்கள் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீராடியதால் பாவச்சுமை கூடிய கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள சிவபெருமானிடம் வரம் கேட்டபோது அவர் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்கள் தங்கி இருந்து புனித நீராட கங்கை உள்ளிட்ட நதிகளுக்கு அருளியதாகவும், அவ்வாறே கங்கை உள்ளிட்ட நதிகளும் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சாப விமோசனம் பெற்றதாகவும் ஐதீகம். இதனால் மயிலாடுதுறை காவிரி காசிக்கு இணையான போற்றப்படுகிறது. சிறப்பான இந்த இத்தளத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு காவிரியின் வடக்கு கரையில் தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தி வருகின்றனர். காவிரியில் சீரான நீரோட்டம் காணப்படுவதால் பக்தர்களின் வரத்து கூடுதலாக உள்ளது.