Skip to content
Home » மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் பாப்புலர் அபுதாஹீர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில்29.12.23 அன்று தனியார் மெடிக்கல் உரிமையாளர் வினோத் ரவுடியால் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும் வணிகர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அரசு காவல்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பி 15க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!