பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். வேட்பாளரை ஆதரித்து திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே என் நேரு தொகுதி முழுவதும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.
இன்று காலை அமைச்சர் நேரு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முசிறி , மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் முசிறி அடுத்த உமையாள்புரம், வெள்ளூர் ,சாலப்பட்டி, காமாட்சி பட்டி ,தொட்டியபட்டி, வெள்ளாளப்பட்டி ,ராசிபுரம் உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக அரசின் சாதனைகளை கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது வீதிகள் தோறும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர் நேருவுடன் வேட்பாளர் அருண்நேரு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், ம த்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் , முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் நிர்வாகி கலை, செந்தில்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், மதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.