Skip to content
Home » குளித்தலை பகுதியில் அமைச்சர் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

குளித்தலை பகுதியில் அமைச்சர் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Senthil

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். திமுக  முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே என் நேரு,  வேட்பாளர் அருண் நேருவுடன் இன்று குளித்தலை ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குளித்தலை  கோட்டைமேடு ,குட்டப்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அமைச்சர் நேருவுடன் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் ,தொகுதி பொறுப்பாளர்கள் எம்பி அப்துல்லா, பரணிதரன், நன்னியூர் ராஜேந்திரன் , திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி , திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சேர்மன் துரைராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் நேரு சென்ற கிராமங்களில் எல்லாம் உதயசூரியனுக்கே வாக்களிப்போம்.  மகளிர் உரிமைத்தொகை வழங்கும் முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த திமுகவுக்கே வாக்களிப்போம் என பெண்கள் கூறினா்.  சென்ற இடங்களில் எல்லாம்  அமைச்சர் நேருவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!