Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர்  செந்தில் பாலாஜி, கடந்த மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால்  சென்னை அமர்வு நீதிபதி அல்லி ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்து, அமைச்சருக்கு 14 நாள்  நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.  அந்த காவல்  முடிவடைந்ததால், காணொலி மூலம் விசாரணை நடத்தி  ஜூலை12 வரை நீதிமன்ற காவலை நீடித்தார்.  இன்றுடன் அந்த காவலும் முடிவடைந்ததால், இன்றும் காணொலி மூலம் விசாரித்து வரும் 26ம் தேதி வரை  நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!