Skip to content
Home » தமிழ்நாடு வருகையை தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி….

தமிழ்நாடு வருகையை தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி….

ரூ.2,467 கோடி புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வருகையை முன்னிட்டு பிரதமர் மோடி, தன்னுடைய டிவிட்டரில் … தமிழக பயணம் தொடர்பாக தமிழ் மொழியில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறும்போது,  “சென்னையில்,சென்னை விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்” என்று இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!