எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களை ஊழல்வாதிகள் என்று பாஜகவினா் பிரசாரம் செய்வார்கள். கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க் கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர்களையும் ஊழல்வாதிகள் என பேசினார். அப்படி அவர் பேசியவர்களில், தற்போது மகாராஷ்ட்ரா துணை முதல்வர் ஆகியுள்ள அஜித் பவாரும் ஒருவர்.
அஜித்பவாரை தாக்கி மோடி பேசிய 2 நாளில் அவர் பாஜக கூட்டணிக்கு தாவி, துணை முதல்வர் ஆகி விட்டார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜெய்ராம்ரமேஷ் ஒரு டவிட்டர் வெளியிட்டு உள்ளார். அதில் பாஜக என்பது ஒரு வாஷிங் மிஷின். பிரதமர் மோடியும், அமலாக்கத்துறை, ஐடி, சிபிஐ போன்ற அமைப்புகள் அனைவரும் வாஷிங் பவுடர் போன்றவர்கள்.
எனவே எதிர்க்கட்சியாய் இருந்து ஊழல் செய்தவர்கள் வாஷிங் மிஷினான பாஜகவுக்கு வந்தால் மோடி வாஷிங் பவுடர் மூலம் அவர்கள் சுத்தமாகி விடுவார்கள் என நையாண்டி செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் மோடி படம் போட்ட வாஷிங் பவுடர் படமும் வெளியிட்டு உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.