Skip to content
Home » தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு நோய்கள் வராது….. டாக்டர் விளக்கம்

தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு நோய்கள் வராது….. டாக்டர் விளக்கம்

  • by Senthil

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக மருத்துவ அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. பாபநாசம் அரசு மருத்துவனை வளாகத்தில் நடந்த உலக தாய்ப் பால் வார விழாவில் மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன் வரவேற்றார். தி.மு.கழக மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் பாபநாசம் வடக்கு தாமரைச் செல்வன், பாபநாசம் தெற்கு நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பேரூராட்சித் தலைவர் பூங்குழலி முன்னிலை வகித்தனர்.

நடுவண் ஒருங்கிணைப்பாளர், தாய்ப் பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பு டாக்டர் சாம்பசிவம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

பிறந்த குழந்தை 24 மணி நேரமும் தாயிடம் இருக்க வேண்டும். பிறந்த உடனே குழந்தைக்கு தாய்ப் பால் தர வேண்டும். தாய்ப் பாலே போதுமானது. பீடிங் பாட்டில் பக்கம் போகக் கூடாது. சீம்பால் தருவதால் தாய்க்கு உதிரப் போக்கு குறைகிறது. தாய்ப் பால் தருவதால் தாய்க்கு 2 ஹார்மோன் சுரக்கிறது. தாய்ப்பால் தருவதால் தாய்க்கு மார்பக புற்று நோய், சினைப் பை புற்று நோய்  தடுக்கப்படுகிறது. தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் வராது. நாம் மாட்டுப் பால் குடிக்காமல் இருந்தாலே வியாதி வராது என்றார்.

இதில் பாபநாசம் அரசு மருத்துவமனை முதன்மை அரசு மருத்துவர் குமரவேல், மருத்துவர்கள் திருக்குமரன், சித்தா பாலசுப்பிரமணியன், செவிலியர்கள், திமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அனிபா, ராயல் அலி, பெருமாள் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் பிரகாஷ், இளைஞரணி நிர்வாகி மணிகண்டன், நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!