மயிலாடுதுறை, கூறைநாடு ஈவெரா தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் (46 ) இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார் .இவரது மனைவி இவரிடம் கோபித்துக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குழந்தைகளுடன் தனியாக சென்று விட்டார்.
அதன் பிறகு இவர் தனியே வச்சித்து வந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் சேகர் மனைவி பிரேமா, இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார், சிரமப்பட்டு வந்த சபரிநாதனுக்கு பிரேமா உதவி செய்து வந்துள்ளார்.
. தற்பொழுது பிரேமா தனது குடும்பத்தாருடன் ஆனந்த தாண்டபுரம் சென்று வசித்து வருகிறார். அடிக்கடி பிரேமா சபரிநாதனுடன் பேசிக் கொண்டிருப்பார்.
இதைக்கண்ட பிரேமாவின் மகன் நடராஜன் (28) என்பவர், எப்படி என் அம்மாவிடம் அடிக்கடி பேசலாம் என்று சபரிநாதனிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். நீ தவறாக நினைக்காதே, நான் அப்படிப்பட்டவன் இல்லை என்று சபரிநாதன் கூறியுள்ளார்.
சம்பவ தினத்தன்று இரவு கூறைநாடுபகுதிக்கு வந்த நடராஜன் நான் பலமுறை சொல்லியும் நீ கேட்காமல் என் அம்மாவிடம் பேசுகிறாய் என்று திட்டி அடித்ததுடன் கத்தியால் வயிற்றிலும் முதுகிலும் சரமாரி குத்தினார். இனிமேல் என் அம்மாவிடம் பேசுவதை பார்த்தால் உன்னை கொன்றுவிடுவேன் என்று கூறிவிட்டு ஓடிவிட்டார் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சபரிநாதனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபரிநாதன் இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.