Skip to content
Home » மணிப்பூரில் மீண்டும் கலவரம்… இன்று 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் மீண்டும் கலவரம்… இன்று 3 பேர் சுட்டுக்கொலை

  • by Senthil

மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று  அதிகாலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குகி-சோ  பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இம்பால், கங்போப்கி மாவட்டங்களின் எல்லையான ஐரேங்- கரன் பகுதிகளில் வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள், கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற கிராமம், பழங்குடியினர் அதிக அளவில் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் வன்முறையால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். Manipur Riots மணிப்பூர் கலவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!