Skip to content
Home » நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு

  • by Senthil

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை  ஒரு முதியவர் தீக்குளித்தார்.  அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தீயை அணைத்து அவரை அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே வாட்டாக்குடி நடுத்தெருவை சேர்ந்த சேகர் (61) என தெரிய வந்தது. மேலும் விசார ணையில், சேகரின் மனைவி குமுதம்(56) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

மகள் சிவகாமசுந்தரி(35) மாற்றுத்திறனாளியான இவர் வேளாங்கண்ணி உடல் ஊனமுற்றோர் காப்பகத்தில் தங்கியுள்ளார். மகன் அருள்ராஜ்(33) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்துள்ளார். மற்றொரு மகன் சபரிநாதன். தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். மனைவி குமுதம் மற்றும் மகன் சபரிநாதன் இறப்பிற்கு கூட சேகர் வரவில்லை.

இதனால் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இரண்டு பேரின் உடலை அடக்கம் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் சேகர் சுற்றி திரிந்துள்ளார்.  இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!