Skip to content
Home » நாகை அருகே வேலை வாங்கி தருவதாக 50 லட்சம் மோசடி… பெண் உள்பட 3பேர் கைது…

நாகை அருகே வேலை வாங்கி தருவதாக 50 லட்சம் மோசடி… பெண் உள்பட 3பேர் கைது…

நாகப்பட்டினம் மாவட்டம், பால்பண்ணைச்சேரி ஆண்டோ சிட்டி பகுதியில் வசிப்பவர் பிரபல ராமகிருஷ்ணா மரவாடி உரிமையாளர் ராமகிருஷ்ணனின் மகள் 33 வயதான ராஜேஸ்வரி மற்றும் திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் நாராயணசாமி மற்றும் அவரது மருமகன் தனபால் ஆகியோர் சேர்ந்து ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக கூறி வலிவலம், வேதாரண்யம் மருதூர் , குருக்கத்தி ,கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 50 லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு தற்போது வரை வேலை வாங்கி தராமலும் வாங்கிய பணத்தினை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் ராஜலட்சுமி,நாராயணசாமி தனபால் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் நாகை அருகே ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!