Skip to content
Home » நாகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து.. 16 பேர் படுகாயம்….

நாகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து.. 16 பேர் படுகாயம்….

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பகுதி மக்கள் சுமார் 16 பேர் திருவாரூர் மாவட்டத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு டாட்டா ஏசி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருக்கை ஊராட்சி பெருந்தலைக்குடி

சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்புறம் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பொதுமக்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் தலைகீழ் கவிழ்ந்து வாகனத்தின் சக்கரம் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது. திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் படுகாயமடைந்த நபர்கள் 4 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நாகை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!