தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நரேன். ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு நெஞ்சிருக்கும் வரை, தம்பிக் கோட்டை, கோ, முகமூடி, ரம், கைதி, சம்பியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘விக்ரம்’ படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையே கேரளாவில் தனியார் டிவி தயாரிப்பாளராக பணியாற்றி வந்த மஞ்சுவை கடந்த 2007-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 14 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் தனது இரண்டாவது மகன் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் போட்டோ ஒன்றை நடிகர் நரேன் வெளியிட்டுள்ளார். அதோடு தனது மகனுக்கு ஓம்கார் நரேன் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் நரேனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.