Skip to content
Home » பெரம்பலூரில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ பிரபாகரன்….

பெரம்பலூரில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ பிரபாகரன்….

  • by Senthil

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,728 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 02 புதிய முழு நேர நியாய விலைக் கடைகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் இன்று (27.06.2023) மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணை பதிவாளர் (பொதுவிநியோகத்திட்டம்)

த.அரப்பலி, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் பாலமுருகன், நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், கூட்டுறவு சார்பதிவாளர் மணி சபரீஸ், 1வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சஹர்பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!