Skip to content
Home » நியூசிலாந்து விடுதியில் திடீர் தீ…..10 பேர் பலி…….பலர் கருகினர்

நியூசிலாந்து விடுதியில் திடீர் தீ…..10 பேர் பலி…….பலர் கருகினர்

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தீ விபத்தில் பலியானோருக்கு பிரதம மந்திரி கிறிஸ் ஹாப்கின்ஸ் இரங்கல் தெரிவித்தார்.  தகவலறிந்து வந்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாஸ்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!