Skip to content
Home » ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

  • by Senthil
 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம்,   இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற அவர்  சிங்கப்பூர் சென்றார். நடிகர் ரஜினி சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் ஓபிஎஸ்  சில நாட்கள் சிகிச்சை பெற்றார்.
அவர் சிங்கப்பூரில்  இருந்தபோது தான், அதிமுகவின் கட்சி, கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என  ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

சிங்கப்பூரில்  சிகிச்சை முடிந்து சென்னைக்கு இன்று  வந்த அவருக்கு அதிமுக கொடி விவகாரம் பெரும் இடியாகவே இருந்தது. ஓபிஎஸ்சை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்கு ஏராளமான தொண்டர்கள் வந்திருந்த  போதிலும்  ஓபிஎஸ் முகத்தில்  மகிழ்ச்சி காணப்படவில்லை.  அதிமுக கொடி பயன்படுத்த முடியாத நிலையால் அவர்  வருத்தத்துடன் காணப்பட்டார்.

அவர் வழக்கமாக பயன்படுத்தும் கார் வந்தது. அதில் அதிமுக கொடி கட்டப்படவில்லை.  அந்த காரில் ஏறி  கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். அவர் கட்டியிருந்த வேட்டியிலும் அதிமுக கரை  இல்லை. சாதாரண வேட்டி தான் அணிந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!