காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகள் காணொளி வாயிலாக பங்கேற்றனர். ,இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்துக்கு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை தினமும் 2600 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ஒழுங்காற்றுக்குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரை குறித்து, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கூறும்போது, தமிழகத்திற்கு தண்ணீர் விட எங்கள் மாநிலத்தில் தண்ணீர் இல்லை. தற்போதுள்ள தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்றார்.
ஒவ்வொரு கூட்டத்திலும், காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் கர்நாடகத்துக்கு தண்ணீர் திறக்க பரிந்துரை செய்வார். அதை கர்நாடகம் ஏற்காது. இப்போதும் வழக்கம் போல கர்நாடக அரசு தண்ணீர் தர முடியாது என கூறிவிட்டது.