தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கும் அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. 22ம் தேதி வரை78 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகள். இந்த நிலையில் 4ம் நாளான நேற்று தமிழ்நாடு, புதுவையில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜக, அதிமுக என பெரும்பாலான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 405 பேர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
எனவே நேற்று மாலை வரை483 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். நாளை மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. 28ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 30ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.