தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கனிமொழி பேசினார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் போதே மகளிர் இட ஒதுக்கீடு குறித்து அரசிதழில் வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பினர். எம்பிக்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும் போது, எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும். குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில் கூட, தெற்கு மாநிலங்களுக்கு பங்களிப்பே இருக்காது. மக்களவையில் தொகுதி மறுவரையறை மீதான விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி பேசினார்.
