Skip to content
Home » பல்லடம் 4 பேர் கொலை…. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்

பல்லடம் 4 பேர் கொலை…. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறு என்ற இடத்தில்  மோகன்ராஜ்,  செந்தில்குமார் மற்றும்   2 பெண்கள் என  4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில்   வெங்கடேசன், சோணைமுத்து செல்லமுத்து என்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில்  செல்லமுத்துவை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர். மற்ற இரு கொலையாளிகளையும் தேடி வந்தனர். இந்த நிலையில் இருவரும்  திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களில் வெங்கடேஷ் தான் முக்கிய குற்றவாளி . இவர் தான்  டிரைவராக வேலை செய்து வந்தார். இவரை பணியில் இருந்து நீக்கியதால் தான் இந்த கொலையை அரங்கேற்றி உள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த கொலையை நேரில் பார்த்த சிறுவர்களையும் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து கொலையாளிகளை அடையாளம் காட்ட ஏற்பாடு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!