Skip to content
Home » அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர்.

சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக சுழற்சி முறையில் ஒரு காவலர் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் உதயநிதி இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்த இந்து அமைப்புகள் முயற்சிக்க கூடும் எனக் கூறப்படுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!