Skip to content
Home » பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அன்பு நகர் பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமார், என்பவரது வீடு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து நிலையில் கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் பிரிவு மற்றும் கைரேகை தடயவியல் நிபுணர்களை கொண்டு சோதனை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வசந்தகுமார் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 25,000 பணத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் வசந்தகுமாரை வரவழைத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் அம்மன் நகரில் வசித்து வருபவர்கள் ஞானசேகர்-ரமா பிரபா தம்பதியினர். இவர்களுக்கு மோனிஷா, கவிநிஷா என்ற இரு மகள்கள் உள்ளனர். ஞானசேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் ரமா பிரபா தனது மகள்களுடனும் தனது அக்கா மகன் மனோஜ் என்பவருடன் வசித்து

வருகிறார்.மனோஜ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்..இந்த நிலையில் ரமா பிரபா தனது மகள்களுடன் கடந்த சனிக்கிழமை கோயம்புத்தூர் சென்றுவிட்டு பின்னர் லால்குடியில் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். மனோஜ் இன்று காலை சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் உள்ளே சென்று பார்த்க போது வீட்டின் பீரோ திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் பிரிவு மற்றும் கைரேகை தடயவியல் நிபுணர்களை கொண்டு தடயங்கள் சேகரித்து விசாரணை நடத்தி. வருகின்றனர். வீட்டில் இருந்த சிசிடிவி கேமிரா மீது கருப்பு நிற பெயின்ட ஸ்பிரே அடித்தும் அதன் ஹார்டிஸ்க்கையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து வீட்டிற்கு வந்க ரமா பிரபாவிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுய உதவிக் குழு கடன் கட்டுவதற்காக வைத்திருந்த 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகைகள் கொள்ளை போனதாக தெரியவருகிறது. இது தொடர்பாக போலீசார் கொள்ளையடித்து சென்றுள்ள மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!