Skip to content
Home » பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூரில் கடந்த 30.10.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தில் அரசு அலுவலர்களையும், காவல்துறையினரையும் தாக்கி அராஜகம் செய்த திமுகவினர் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுகவினரின் பல்வேறு விரோத செயல்களை கண்டும் காணாமலும் செயல்பட்டு வரும் திமுக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் வளாகம் எதிரில் மாவட்ட செயலாளர் இளம்பை. தமிழ்செல்வன் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர், வரகூர் அருணாச்சலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகாசி, மருதராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை செழியன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், நகர செயலாளர் ராஜபூபதி, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கண்ணன், மற்றும் நிர்வாகிகள், கிளை செயலாளர், உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!