Skip to content
Home » பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்..

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்..

  • by Senthil

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக   வேட்பாளராக  அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்.   அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார். இதையொட்டி இன்று காலை அவர்  பெரம்பலூரில் உள்ள  ஆ. ராசா அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அமைச்சர்கள் கே. என். நேரு,  சிவசங்கர்,  ஆ. ராசா,  மாவட்ட திமுக  பொறுப்பாளர் ஜெகதீசன்,  மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மற்றும் விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  கொமதேக  உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்தனர். தேர்தல் பணிகள் குறித்துஐ சிறிது நேரம் ஆலோசித்தனர்.

அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு  அருண் நேரு அங்கிருந்து மாவட்ட  கலெக்டர் அலுவலகம் புறப்பட்டு சென்றார்.  கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான கற்பகத்திடம்  அருண்நேரு வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட  திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!