Skip to content
Home » பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

  • by Senthil

பெரம்பலூர் அருகே எசனை காட்டு மாரியம்மன் பிரிவு சாலை அருகே சின்ன செட்டி என்பவரின் விவசாய நிலத்தில் அமைந்துள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண சடலம் ஒன்று மிதப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் சடலத்தை கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் அதே எசனை கிராமம் தெற்குத்தெருவைச் சேர்ந்த தங்கராசு

மகன் கமலக்கண்ணன்(25) என தெரிய வருகிறது. இவர் நேற்று காலை 11 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் இன்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமலகண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பெரம்பலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!