Skip to content
Home » வாக்கு சேகரிப்பு…..பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏவுக்கு….. நரிக்குறவர்கள் கடும் எதிர்ப்பு

வாக்கு சேகரிப்பு…..பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏவுக்கு….. நரிக்குறவர்கள் கடும் எதிர்ப்பு

  • by Senthil

 

பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ. பிரபாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள், பெரம்பலூர்  நாடாளுமன்ற  தொகுதி திமுக  வேட்பாளர்  அருண் நேருவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள், நேற்று  எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்  வேட்பாளருடன்,  எறையூர் நரிக்குறவர் காலனிக்கு வாக்கு  சேகரிக்க சென்றனர்.

அப்போது அங்குள்ள நரிக்குறவர் சமூகத்தினர்,  எம்ஜிஆரால் வழங்கப்பட்ட, எங்கள் நிலத்தை பறித்து சிப்காட்டுக்கு கொடுத்து விட்டீர்கள்.  இப்போது ஏன் இங்கு ஓட்டு கேட்க வந்தீர்கள் என  சரமாரி கேள்விகேட்டனர்.   சிப்காட் தொழில்பேட்டை தொடங்கப்பட்டதால் ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என திமுகவினர் விளக்கம் அளிக்கத் தொடங்கினர். ஆனால் நரிக்குறவர்கள் அதை கேட்கும் நிலையில் இல்லை. எங்களிடம் இருந்து ஏன் நிலத்தை எடுத்தீர்கள் என ஒரே பிடியில் இருந்தனர். இதனால் திமுகவினர் மேற்கொண்டு அவர்களிடம் பேசாமல் அங்கிருந்து  புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து நரிக்குறவர்கள் கூறும்போது,
40 ஆண்டு காலமாக எங்களது பயன்பாட்டில் இருந்த விவசாய நிலத்தை திட்டமிட்டு பிடுங்கி கொண்டனர். எங்கள் நிலத்தை எடுத்து  உருவாக்கிய சிப்காட்டில் எங்களுக்கு வேலை தரவேண்டும். அதுவும் தரவில்லை என்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!