பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் விடும் சம்பவம் அடிதடிகள் முடிந்தது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த திமுக பிரமுகர்கள் கல்குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜக பிரமுகர் கலைச்செல்வனை அடித்து உதைத்தனர்.தடுக்க முயன்ற கனிமவளத்துறை அதிகாரிகளையும் தாக்கினர்
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஜெயபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கொலை மிரட்டல் விடுதல், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அன்பழகன், தர்மராஜ், குடியரசன், அன்புச்செல்வன், லெனின், கருணாநிதி, இளங்கண்ணன், செல்லம் சேட்டு என்ற பெரியசாமி, மாரிமுத்து, வெத்தலை குமார் என்ற சிவக்குமார் , மு கருணாநிதி ஆகியோரை பிடித்து கைது செய்த பெரம்பலூர் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .