பெரம்பலூர் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 55-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம் சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதேபோல், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ம.ராஜ்குமார், வீ.ஜெகதீசன்,எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், பேரூர் செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ்,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் எ.ரசூல்அகமது, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணா.இள, தொ.மு.ச.மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார்,தொ.மு.ச. மாவட்ட கவுண்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, வேப்பந்தட்டை மேற்கு பாண்டகப்பாடி கணேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.