Skip to content
Home » பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவயூர் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து என்பவரின் மகன் சிவசக்தி(22), இவரது நண்பரான பெரியசாமி மகன் தீனதயாளன்( 23) என்பவர்கள் இருவரும் பெரம்பலூருக்கு செல்லும் வழியில் கார்

மீது மோதி விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்து சிவ சக்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த தீனதயாளனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில், மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!