Skip to content
Home » துப்பாக்கி சுடும் போட்டி…திருச்சி மாவட்ட ஊர்காவல் படையினர் முதலிடம்…

துப்பாக்கி சுடும் போட்டி…திருச்சி மாவட்ட ஊர்காவல் படையினர் முதலிடம்…

  • by Senthil

தமிழ்நாடு ஊர் காவல் படையில் மாநில அளவிலான 28- வது தொழில் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் -2023 வேலூர் சரகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் திருச்சி சரக சார்பாக திருச்சி மாவட்ட ஊர் காவல் படையினர் கலந்துகொண்டு ஆண்கள் துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும் பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தையும் ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும் துணை வட்டாரத் தளபதி முத்துமாலா தேவி துணை வட்டார தளபதி பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இரண்டாம் இடத்தையும் பெற்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை ,திருச்சி மாவட்ட வட்டாரத் தளபதி சய்ஃப், துணை வட்டார தளபதி முத்துமாலா தேவி மற்றும் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!