Skip to content
Home » பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Senthil

பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  மகேஷ்  பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான  ஆண்டு இறுதி பொதுத்தேர்வு  மார்ச் மாதம் நடைபெறும். இதுபோல 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.  மேற்கண்ட  பொதுத் தேர்வுக்கான அட்டவணை  ஒரு சில நாட்களில் வெளியாகும்.  நீட் உள்ளிட்ட தேர்வுகளுடன் குறுக்கிடாத வகையில் 3 வகையான அட்டவணை தயார்  செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.  மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!