Skip to content
Home » போலீசாரை கண்டித்து விவசாயி கலெக்டர் கண்முன்னே தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு…

போலீசாரை கண்டித்து விவசாயி கலெக்டர் கண்முன்னே தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு…

மயிலாடுதுறை அருகே ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் மதன்மோகன்(35) விவசாயி இவர் கடந்த 2019ம் ஆண்டு தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி 2 டிராக்டர்கள் வாங்கியுள்ளார். கடன் தவணை முறையாக செலுத்தா த நிலையில் 2020 ஆண்டு தனியார் டிராக்டர் நிறுவனம் போலி கையெழுத்து போட்டு டிராக்டரை வேறு நபர் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்து போலி பத்திரம் மூலம் விற்பனை செய்ததாக மதன் குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி, மயிலாடுதுறை வட்ட டார போக்குவரத்து அலுவலகம் முன்பு விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட பல கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில் மதன்மோகன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனியார் நிறுவன உரிமையாளர்கள் கண்ணதாசன், வேல்முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்து 4 மாதங்களாகியும் அவர்களை கைது செய்யாததால் மதன்மோகன் கடந்த மாதம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி காரில் அலுவலகம் வந்ததை பார்த்த மதன்மோகன் திடீரென்று மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக காவல்துறையினர் மதன்மோகன் கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவரது தலையில் தண்ணீரை ஊற்றி தடுத்தனர். சம்பவத்தைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் காரில் இருந்து இறங்கி மதன்மோகனிடம் சுமார் 15 நிமிடங்கள் குறைகளை கேட்டறிந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!