Skip to content
Home » மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

நாடாளுமன்ற  மக்களவையில் இன்று  திடீரென 2 பேர் புகுந்து கோஷம் போட்டதுடன் வண்ண புகை குப்பியையும் வீசினர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபோல வெளியிலும் கோஷம் போட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரிடமும்  பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தை மத்திய  அரசின் பாதுகாப்பு ஆலோசகர் அஜய் பல்லா,  டில்லி போலீஸ் கமிஷனர்  சஞ்சய் அரோரா,  சிஆர்பிஎப்  டைரக்டர் ஜெனரல்  அனிஷ் தயாள் சிங் ஆகியோர் மக்களவைக்குள் சென்று சம்பவம் நடந்த  இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மைசூர்  பொறியியல் கல்லூரி மாணவர்   மனோரஞ்சன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரது தந்தையிடம் இதுபற்றி கேட்டபோது, என் மகன்  எந்த  தீய பழக்கங்கள், தீய தொடர்புகள் இல்லாதவன், அவனை யாரோ மூளைச்சலவை செய்து அழைத்து சென்று இருக்கிறார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!