நடிகை விஜயலட்மி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்தார். பல முறை கருவுற்ற நிலையிலும் கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்தார். தன்னை ஏமாற்றி பல லட்சம் ரொக்கம், நகைகளை வாங்கிகொண்டார் என அதில் கூறி இருந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர். சீமான் வெளியூர் செல்ல இருப்பதால், அவர் 12-ந்தேதி ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.