Skip to content
Home » பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை

பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை

  • by Senthil

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனான பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்தினர். திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி.

இந்நிலையில் கோவை கிருஷ்ணா காலணியில் உள்ள பைந்தமிழ் பாரி வீட்டில் 15 பேர் கொண்ட கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் பைந்தமிழ் பாரி மற்றும் அவரது தந்தை பொங்கலூர்

பழனிச்சாமி ஆகியோர் கல்குவாரி வைத்து தொழில் செய்து வரும் நிலையில் கல்குவாரி முறையாக நடத்தாமல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக பதிவு எண் கொண்ட இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது கிளம்பி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் காரில் இல்லாமல் நடந்து வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!