Skip to content
Home » தமிழ்நாட்டில்……….தபால் ஓட்டுகள் பெறும் பணி தொடங்கியது

தமிழ்நாட்டில்……….தபால் ஓட்டுகள் பெறும் பணி தொடங்கியது

  • by Senthil

தமிழ்நாட்டில் வரும்  19ம் தேதி் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது.வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தபால் வாக்குகளை பெறும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இன்று (04.04.2024) முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது.இந்த நாட்களில் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி மீண்டும் ஒரு முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!