Skip to content
Home » புதுச்சேரி பைனான்சியர் வீட்டில் ரூ.3.68 கோடி பறிமுதல்

புதுச்சேரி பைனான்சியர் வீட்டில் ரூ.3.68 கோடி பறிமுதல்

புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு  பாஜக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற்காக புதுச்சேரியில் உள்ள ஒரு  பைனான்சியர் வீூட்டில்  பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் வந்தது. அதன் பேரில் பறக்கும்படி அதிகாரிகள்  ரெட்டியார்பாளையம் ஜான்சி நகரில் உள்ள  பைனான்சியர் வீட்டுக்கு சென்று சோதனை போட்டனர். அப்போது அங்கு 3 கோடியே 68 லட்சத்து 78 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் அங்கு  அரசு வாபஸ் பெற்ற ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் ரூ.1 கோடி அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பைனான்சியர் முதல்வர் ரெங்கசாமிக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!