Skip to content
Home » புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை  அடுத்த மீமிசல் அருகே குமரப்பன் வயல் கிராமத்தில் உள்ள குளத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (30),  கணேசன் (32), சந்தோஷ் (21) ஆகிய 3 பேரும்  குளித்துக்கொண்டு இருந்தபோது குளத்தின் அடிப்பகுதியில் கற்சிலை கிடப்பது தென்பட்டுள்ளது. இதையடுத்து வெளியே எடுத்து பார்த்தபோது அது பழமையான கல்லால் செய்யப்பட்ட சாமி சிலை என தெரியவந்துள்ளது. அதன் அருகருகே மொத்தம் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீமிசல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிலைகளை கைபற்றி மணமேல்குடி வருவாய் துறையினரிடம் ஓப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!