Skip to content
Home » ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், வாண்டாகோட்டையைச் சேர்ந்தவர் வீரப்பன் (70). இவர் புதுக்கோட்டை கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் வீட்டின் அருகில் வாக்கிங் சென்றபோது அங்குவந்த இருவர் கத்தியைக் காட்டி கையில் போட்டிருந்த தங்கமோதிரம் இரண்டை பறித்துச் சென்று விட்டனர். இதேபோலஅரிமளம், வல்லத்திராக்கோட்டை ,கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக வழிப்பறி நடந்து வந்தது.

இது குறித்து  புதுக்கோட்டை போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி வந்தனர். இதில்  புதுக்கோட்டை மாவட்டம்

மணமேல்குடி தாலுகா இடையாற்று வேதியங்குடியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் முத்துராமன் என்ற ஜீவா ( 24) அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் மகன் காளிதாஸ் (வயது 20) அறந்தாங்கி எல் என்.புரம் காந்தி நகர் 3ம் வீதியைச்சேர்ந்த கண்ணன் மலையாண்டி மகன் (வயது 17 )(11 ம் வகுப்பு படிக்கும் மாணவன்.), தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் குறவன் காலனியைச்சேர்ந்த ராஜேந்திரன் மகன் குட்டி என்ற சந்தோஷ் (22) ஆகிய நால்வரும் வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். அதில் தப்பி ஓடிய ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவரையும் பிடித்த போலீசார் அனைவரையும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!