Skip to content
Home » புதுகை சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு….

புதுகை சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் செட்டிகுளம் அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியை யொட்டி பரமபத வாசல் திறப்பு நடந்தது. உற்சவர் பெருமாள் பரமபத வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கோவிந்தா. கோவிந்தா..என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். கோவில் அர்ச்சகர் ராகவன் பட்டாச்சாரியார் ஐதீக முறைப்படி பெருமாளுக்கு அபிஷேக அலங்காரங்களை செய்து

தீபாராதனை வழிபாடுகளை நடத்தினார். ஒணாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கரு.முருகேசன், ஒய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் எஸ்.ராமசாமி குடும்பத்தினர் மற்றும் திரளான நகரத்தார்கள், ஊர் பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் துளசிதீர்த்தம், உப்புமா பிரசாதம் வழங்கப்பட்டது. ப.செ.செ.மு, ப.செ.செ.கதி குடும்பத்தினர் விழா ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர். இதே போல் அரிமழம் மார்க்கெட் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!