Skip to content
Home » குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேர்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ஐடியில் வேலை செய்யும்    ஆண்கள்.  இவர்களில் 2 பேர்  சென்னையில் இருந்தும் ஒருவர் பெங்களூரில் இருந்து காய்ச்சலுடன் வந்தவர்கள்.  இங்கு ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு உறுதியானதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூரில்  11 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  புதுக்கோட்டையில் 5 பேரும், திருவண்ணாமலையில்  5 பேரும் டெங்கு பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!