Skip to content
Home » மதத்தால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்தி….. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

மதத்தால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்தி….. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

  • by Senthil

ஓபிஎஸ் அணியில் கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர்  புகழேந்தி. இவருக்கு ஓசூரில் வாக்கு உள்ளது. இன்று  மதியம் அவர்  ஓசூரில் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில்,  மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்தேன் .மதத்தால் நம்மை யாரும் பிரிக்க முடியாது. பெரியார், அண்ணா, எம்.ஜிஆர், ஜெயலலிதா வழியில் மதசார்பற்ற  ஜனநாயகத்தை தழைக்க செய்ய வாக்களித்தேன்’ என்றார்.

பொதுவாக  மதத்தால் , கடவுளால் அரசியல் செய்யும் கட்சி பாஜக.  ஓபிஎஸ் அந்த பாஜகவுடன் தான் கூட்டணி வைத்து உள்ளார். ஆனால் புகழேந்தியின் பேட்டியை பார்த்தால் அவர் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தது போல தெரிகிறது என  அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.  ஓபிஎஸ்சிடம் இருந்து புகழேந்தியும் விலகிவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!