Skip to content
Home » நீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்த எம்எல்ஏ…..

நீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்த எம்எல்ஏ…..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, தேவன்குடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் தேவன்குடி கிராமத்தில் அண்ணாமலை நகர் பகுதியில் 20 குடிசை வீடுகளில் மழை நீர் புகுந்ததால், அதில் வசித்து வந்த 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். நீரில் மூழ்கிய நெற்பயிர்களையும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுகளை அறிவுறுத்தினார். பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலர் நாசர், வீரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கனகம், சோமேஸ்வரபுரம் சாந்தி கார்த்திக், விவசாயத் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுப்பணித்துறை, வேளாண்மை துறையினர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!